வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

எங்கள் தேசத்தின், தேசியகவிஞன் விடுதலைக்கு நாம் என்ன செய்தோம் ?

பதவஎங்கள் தேசத்தின், தேசியகவிஞன் விடுதலைக்கு நாம் என்ன செய்தோம் ?
எமது மண்ணையும் மக்களையும் நேசித்த மகத்தான கவிஞன் புதுவை இரத்தினதுரை. ஒரு கவிஞனாக வெறும் பாடல் புனைவதுடன் நின்றுவிடாமல் அந்த காலகட்டத்தின் வரலாற்றுதேவை கருதி எமது மக்களின் விடுதலைக்கான பெரும் பாதையில் நடந்தவனும் புதுவை.எங்கள் தேசத்தின், தேசியகவிஞன் அவன். அவன் செய்த பிழை வேறு எதுவும் இல்லை. தனது தேசத்தின் விடுதலைக்காக உரக்க,ஓங்கி குரல் கொடுத்ததுதான் அவனின் தவறு. மண்ணையும் மண்ணில் எழுந்து நின்ற தேசத்து பூக்களையும், அலை எறிந்த கடலையும், வயல்வெளிகளையும் மட்டும் பாடிக்கொண்டு இருக்காமல் தன் காலத்தில் தனது கண்முன்னே நிகழ்ந்த ஒரு உன்னத விடுதலைப்போராட்டத்தின் அர்ப்பணங்களையும், தியாகங்களையும் தன் கவிதைமூலம் வெளிக்கோண்டுவந்தவன்.







இன்று அவரை சிங்களபேரினவாதம் சிறைக்குள் அடைத்துவைத்திருந்து தவிக்கவைத்திருக்கிறது. அவரின் விடுதலை என்பது எமது கையொப்பங்களால் சாத்தியமாகக்கூடியதாக இருக்கின்றது. எனவே தயவுசெய்து இந்த படிவத்தில் கையொப்பமிட்டு அவரின் விடுதலைக்கு உங்கள் ஒத்துழைப்பையும் தர வேண்டுகின்றோம். இது எவ்வளவுதூரம் சாத்தியம்,..இது சாத்தியமா என்பதல்ல எம்முன்னால் உள்ள பிரச்சனை.. இப்படி ஒரு வழி இருக்கும்போது அதனை ஒரு முறை செயற்படுத்தி பார்ப்போம்.
எனவே தயவுசெய்து இதில் கையொப்பமிடும்படி மீண்டும் கேட்டுகொள்கின்றோம்: மிகவும் பாதுகாப்பாக உங்கள் இரகசியங்கள் கையாளப்படும். எனவே தமிழர்கள் அனைவரும் உங்கள் கையொப்பங்களை கீழ் காணும் இணையமூடாக பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேம்.
http://www.avaaz.org/en/petition/Where_Is_Puthuvai_Ratnathurai/?floeKdb&;pv=4
http://www.avaaz.org/en/petition/Where_Is_Puthuvai_Ratnathurai/?floeKdb&;pv=4

கருத்துகள் இல்லை: