சனி, 31 ஆகஸ்ட், 2013

யாழ் பல்கலைக் கழகத்தில் தாய்மொழி தமிழுக்கு தடை-(படங்கள் இணைப்பு)


தமிழ் பிறந்த மண்ணாம் யாழ்ப்பணத்தில் தாய்மொழி தமிழுக்கு தடை விதித்துள்ளார்கள். வடதமிழீழம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அண்மைக் காலங்களாக நிகழ்வுகளுக்கு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் முன்னிலைப்படுத்துவதன் நோக்கம் என்ன? இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் ?
கடந்த முறை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கடுமையான விமர்சனம் முன்வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விதமான செயற்பாடும் இனவழிப்பில் ஒரு வகை என்பதை இங்கு ஆணித்தரமாக பதிவு செய்ய கடமைபட்டு இருக்கிறோம்
மொழி அழிந்து போனால், இனம் அழிந்து போகும்…!

கருத்துகள் இல்லை: