வெள்ளி, 6 செப்டம்பர், 2013

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள்.

"மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
இருப்பது எம் கடமை"

திராவிடம் செய்யும் தீமைகளை மறப்பது தமிழினின் இயல்பு ....
திராவிடம் வேண்டாம் என்று நினைவு படுத்துவது எனது கடமை

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் :-


1. அண்டை மாநிலத்தில் இதுவரை தமிழன் முதல்வர் பதவியல் இருத்து இருகிறான? அப்படி இல்லாத போது வீட்டில் தெலுங்கு / கன்னடம் / மலயாளம் பேசும் இவர்கள் எப்படி தமிழர்களின் இன உணர்வை புரிந்து கொள்ள முடியும் ...

2. திராவிட கட்சிகளால் ஏன் இன்னும் ஒடுக்கப்பட்ட இன மக்கள் ஏன் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை ... ஆனால், திராவிடம் இல்லாத மண்ணில் தான் ............ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் தலைவராகஅமைச்சராக முடிந்தது. திராவிடம் இல்லாத மண்ணில் தான் ............ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள மாயாவதி முதல்வர் ஆகா முடிந்தது.

3. திராவிடம் என்றால் தெலுங்கன், கன்னடன், மலையாளி சேர்ந்த ஒன்று என்று சொல்லும் உனனால் ஏன் இன்னும் காவிரி தண்ணீரை வாங்கி தர முடியவில்லை.
முல்லை பெரியாறு அணையில் இதுவரை நமக்கு தண்ணீர் வரவில்லை ... தமிழன் மீது இன வெறியை துண்டி தமிழனுக்கு தண்ணீர் தர மறுத்த தெலுங்கர்கள்.....ஏன் ஏன் ஏன் .

4. திராவிடம் பேசும் நீ தீண்டாமை பேசும் நீ ஏன் இன்னும் தமிழகத்தின் கிராமங்களில் ஜாதியின் பெயரால் இருக்கும் இரட்டைக் குவளை முறையை மற்ற முடியவில்லை. ஏன் ஏன் ஏன் ..

5. திராவிடம் பேசும் நீ இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க நீ என்ன முயற்சி செய்தாய்...

6. திராவிடம் பேசும் நீ ஏன் இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் மௌனம் மகா இருந்தது ஏன் ... ஏன் ஆட்சில் இருந்து வெளிய வர வேண்டியது தானே ஏன் உன்னால் முடியவில்லை ...அப்படி செய்தால் கனி மொழி மற்றும் ராசா உடன் சேர்த்து ச்பெச்ரம் முறைகேடு செய்ய முடியாது என்றோ ?

7. திராவிடம் பேசும் நீ ஏன்டா .. குடும்ப அரசியல் பண்ணி தமிழர்களை படுகொலை செய்கிரா...

8. திராவிடம் பேசும் நீ ...ஆரியத்துக்கு எதிராய் தான் திராவிடம் வந்தது என்றால் பார்பனியர் எப்படி திராவிட கட்சில் வந்தார்கள்.

9. திராவிடம் பேசும் நீ ... சாராயம் கொடுத்து தமிழர்களை ஏன் அடிமையை போல வைத்து இருக்கிறாய் ... சாராயத்தை நிறுத்த வேண்டியது தானே ...

10. பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலமா ?

11. தமிழர்களின் விளை நிலத்தை தெலுங்கு / மலையாளி/ கன்னட / வட இந்தியர் வாங்கி கொளுமையை இறுக்க வழி வகுக்கும் தெலுங்கு / மலையாளி/ கன்னட அரசியல் வியாதிகளே ...

12. திராவிடம் பேசும் நீ ....தமிழர்களை கடன் வாங்கி கடன்காரனாக ஆக்கும் முத்தூட் / மனபுரம் / மர்வடி நிறுவனத்திற்கு மற்றக .... தமிழகத்தில் வங்கி மூலம் கடன் கொடுத்து தமிழர் நலம் காக்க மறந்தது எப்படி ...

என்னை திராவிடனாய் இரு என்று சொல்ல நீ யாராட பொறம்போக்கு

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்
தமிழ் சாதிகள், தமிழ் இனமாய் ஓன்று சேர்வோம். தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது. திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி. "

விழுவது எல்லாம் அழுவதற்கு இல்லை ..
விழுவது எல்லாம் எழுவதற்கு !! 

 
 நன்றி.தமிழ் அனிதா

நாம் தமிழரா திராவிடரா? செந்தமிழன் சீமானின் பதில்.

சீமானின் சிறப்பானக் கேள்விகளும் அதற்க்கான தமிழர் உலகம் பதில்களும்.

மத்திய கிழக்கு நாடொன்றில் சீமான் அவர்கள் பேசிய பேச்சின் சில பகுதிகளோடு, எமது தகவல்களையும் சேர்த்து உருவாக்கிய காணொளி இது.

தமிழகத்தில் நிலவும் சில குழப்பங்களுக்கு தெளிவான விடை கொடுக்கும்படியான செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

திராவிடத்தை சமூக தளத்திலும், அரசியல் தளத்திலும் உடனடியாக வீழத்த வேண்டிய கடமை, படித்தத் தமிழர்கள் அனைவருக்குமே உண்டு. இதை மறந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. எப்போதும் ஏமாறுவதே தமிழரின் வாடிக்கையாகி விடக்கூடாது.

இன மீட்சிப் பணியில் ஈவு இரக்கம் காட்டக் கூடாது. தன நபர் நட்பு நமது ஆய்வில், அரசியலில் குறுக்கிடக் கூடாது.

எந்த சமூகத்துக்கும் தமிழர் பகையல்ல. நம்மை நாம் ஆள நினைப்பது, மாற்றாரைப் பகைப்பதாகாது. சிறுபாண்மை சமூகத்தின் தனிமனித உரிமைகளை மதிப்பவன் தான் உண்மைத் தமிழன்.

தமிழியம் வளர்த்தெடுப்போம். தமிழராய் நிமிர்ந்து நிற்போம். எதிர்கால உலகிற்கு வழி காட்டுவோம். அன்பையும், அமைதியையும் உலகிற்கு போதிப்போம்

வியாழன், 5 செப்டம்பர், 2013

செந்தமிழன் சீமானின் தமிழ் பேச்சின் சிதறல்கள் படித்ததில் சில பிடித்தவை.

 இவ்வளவு நாளும் தமிழர்களைக் கொன்று குவித்தார்களே... யார் இங்கே அடித்தார்கள் என்று அங்கு கொன்று குவித்தார்கள்? நாங்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் மட்டும் எங்கள் மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து வாழவைத்து விடுவார்களா என்ன?


எங்கள் இனம் மொத்தமும் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டபோதும்கூட, அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும்கொண்டு வெறிகொண்ட மிருகங்களைப் போல உலவியபோதும்கூட,
ஒரு சிங்களவன் மீதுகூட நகக்கீறலை ஏற்படுத்தாத ஜனநாயகப் பிள்ளைகள் நாங்கள்.

உள்ளுக்குள் எரிந்துகொண்டு இருந்த நெருப்பைக்கூட எங்கள் மீது கொட்டிக்கொண்டு வெந்து செத்தோமே தவிர, ஒரு சிங்களவனையும் தொடவில்லை. ஆனால், எல்லாவற்றுக்குமே ஓர் எல்லை உண்டு. இப்போதும்கூட அடிக்கவில்லை, தாக்கவில்லை. ஆனால், செய்ய முடியும். இனியும் எங்கள் மீனவர்களைத் தொடாதே என்று எச்சரிக்கிறோம்.

12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்.

ஒரே கனவு... 12 கோடி மக்கள், இரண்டு பெரும் தாய்நிலங்களைக்கொண்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு நாடு அடைந்து, சுதந்திரமாக வாழ வேண்டும். இலங்கை இரு நாடுகளாக வேண்டும். அதுதான் கனவு.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

இலங்கையை மன்னிக்கலாம்! இந்தியாவை?

பிப் 28/2013: இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விவாதம் விவாதம் இன்று  ராஜ்யசபாவில் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர், இலங்கையை எதிரி நாடாக பார்க்க முடியாது என்றும், இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி இப்போது கூற இயலாது என்றும் கூறினார். 

சிந்திக்கவும்: இந்த நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்புகளில் ஒன்று  இலங்கையிலே நடந்தேறியது. மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப்போனார்கள்.

தமிழ் மக்கள் கூட்டம் ராணுவத்திடம் சரணடைய வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்’ என்று கட்டளை இட்டது ராணுவம். வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர்.

வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகாமிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள். போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை ராணுவம் பயன்படுத்தியது.

இந்தனை நடந்தும், இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது இந்தியா. ஆறரை கோடி மக்களை கொண்ட தனது நாட்டின், ஒரு மாநிலத்து மக்களின் உணர்வுகளை மதிக்காது, காலில் போட்டு மிதிக்கும் இந்தியாவை இனி தமிழர்கள் அந்நிய நாடாக கருத வேண்டும். இலங்கையை எதிரி நாடக பார்க்க முடியாது என்று இந்திய வெளிவுறவு துறை அமைச்சர் சொல்லி விட்டார். அதானால் நாம் இந்தியாவை எதிரி நாடாக பார்க்க வேண்டியதுதான்

உலகமே மனித உரிமை மீறல் நடந்திருகிறது, போர் குற்றம் நடந்திருக்கிறது என்று சொல்லும் பொழுது இந்தியா மவுனம் காப்பது ஏன்? எதிரி ராஜபக்சேவையும், இலங்கையும் கூட மன்னித்து விடலாம். ஆனால், துரோகி இந்தியாவை மன்னிக்க முடியாது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முதல் இப்பொழுது நடந்த இன அழிப்பு போர் குற்றம் வரை அனைத்துக்கும்.இந்தியாவே முழுமுதல் காரணம்

இலங்கையில் ஆதிக்கம். செலுத்த வேண்டும் என்கிற இந்தியாவின் வல்லரசு போதைக்கு இரையாக விடுதலை புலிகள் முதல் அனைத்து போராளி இயக்கங்களுக்கும் இந்தியாவில் வைத்து பயிற்சி கொடுத்து இலங்கை உள்நாட்டு போரை முன்னின்று நடத்தியதே இந்தியாதான், இலங்கை அரசோடு அனுசரணை ஏற்பட்டதும் தமிழ் போராளிகளை ஒடுக்க அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை அனுப்பியது இப்படி ஈழத்தில் நடந்த அனைத்து துர்சம்பவங்களுக்கு இந்தியாவே முற்றிலும் காரணம். 

 பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டு கொல்லபட்டது முதல் இத்தனை அநியாயங்களுக்கும் இந்தியா ஒரு கண்டனனமாவது தெரிவித்த்ருக்குமா? 

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குழப்பம்!

மார்ச் 08: இன அழிப்பு பயங்கரவாதி ராஜபக்சேக்கு எதிராக தமிழர்களும், உலக நாடுகளும் குரல் எழுப்புவது இந்தியாவின் காதுகளுக்கு கேட்கவே இல்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல மவுனம் காக்கிறது.

பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி நடந்த  சிறப்பு விவாதத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் இந்திய அரசை செருப்பால் அடிக்கும் விதத்தில் கேள்விகளை கேட்டார். அவரது கேள்விகளுக்கு நாட்டை ஆளும் கோட்டான்கள் பதில் சொல்லுமா?

இலங்கை தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (இந்தியா) எதிர்ப்பு தெரிவித்தீர்களா?

உலக அரங்கில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்கும் என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை இந்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கை நடந்த தமிழர் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குழப்பம் இருக்கிறது. 

மேலும் சோனியாகாந்தியை பார்த்து சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் மத்திய அரசை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத்துறை மந்திரியும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு தேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல என்று பேசினார். 

சிந்திக்கவும்;  முலாயம்சிங்குக்கு தெரிந்த உண்மை நமது மெத்த படித்த பொருளாதார புலி மண்ணு மோகன் சிங்குக்கு தெரியாமல் போனாதேனோ! 

புதன், 4 செப்டம்பர், 2013

சிங்களவர்கள் இந்தியர்களா?

ஏப்ரல் 09/2013: பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் என பா.ஜ.க. தேசியச் செயலாளர் டாக்டர். தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

சிந்திக்கவும்:  RSS இயக்கத்தின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி என்பது யாவரும் அறிந்ததே.

 RSS இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் RSS இயக்கத்தின்  ஆன்லைன் மாத இதழான ஸம்வாதம் ஆர்க்கில் எழுதியுள்ள கட்டுரையில் சிங்கள பயங்கரவாத  இயக்கமான பொது பல சேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


இலங்கையில் உணவுப்பொருட்களின் பொதிகளில் ஹலால் முத்திரை பதிப்பதற்கு எதிராகவும், முஸ்லிம்களின் வழிபட்டு உரிமைகளுக்கு எதிராகவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் செயல்படும் பல சேனாவின் செயல்பாடுகளை அவர் பகிரங்கமாக ஆதரித்த எழுதியுள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்று நாயகர்களான  தமிழ் ஈழ விடுதலை  புலிகளின் கட்டுப்பாடு கிறிஸ்தவ சபைகளின் கரங்களில் இருந்தது என்று கீழ்த்தரமான ஒரு குற்றச்சாட்டையும் அதில் வைக்கிறார். ஹிந்துதுவாவின் நம்பிக்கை சிங்களர்கள் ஆர்ய வம்சாவளியைச் சார்ந்த வட இந்தியர்கள் என்பதே. இதை மையமாக வைத்தே RSS  இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் இக்கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதில் பெரும்பகுதி மக்கள் இலங்கை தமிழ் இந்துக்களே! ஈழத்திலே சிங்கள பேரினவாதிகளால் உடைத்தெரியப்பட்ட கோவில்கள் பலநூறு. இலங்கையில் கொல்லப்படுபவர்கள் இந்துக்கள் என்கிற உணர்வு ஆரம்பம் முதல் பாரதிய ஜனதாவுக்கு இருந்ததில்லை.  சிலதினங்களுக்கு முன்னர்தான் ஈழத்து  படுகொலையை “இனப்படுகொலை” என்று தீர்மனம் இயற்ற முடியாது என ஆளும் காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது, முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் (BJP) கூறி இருந்தது. 

பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் இதுபோன்ற தீர்மானங்களை இந்தியா கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஈழத்து விடுதலை போராட்டத்திற்கு எதிராகவே பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி, தினமலர், தினமணி, இந்தியா டுடே போன்றோர் குரல் எழுப்பி வந்தனர் என்பதை தமிழர்கள் மறந்து விடவில்லை.

அரசியலுக்காக ஓட்டு வாங்க அம்மாவும், பாரதிய ஜனதாவும் பகல் வேஷம் போடுவதை தமிழர்கள் நன்கறிவார்கள். அதனால் கருணாநிதியை யோக்கியர் என்று எண்ணிவிட வேண்டாம்! இவர்கள் நெஞ்சில் குத்தினால் கருணாநிதி முதுகில் குத்துவார்!

ஹிட்லரை பார்க்கனுமா? இலங்கைக்கு போங்கள்!

மே 09: இலங்கை சிங்கள பேரினவாத அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலையை தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும்  அடக்கு முறைகளை கட்டவிழ்த்து வந்தது. 

அதன் தொடர்ச்சியாக, பத்திரிக்கையாளர்கள் கைது, பத்திரிகை அலுவலகங்கள் தாக்குதல் ஜனநாயக ரீதியா பேச்சு சுதந்திரம் பறிப்பு, தொழில்  நிறுவனங்கள் மீதான சூறையாடுதல், மத ரீதியான உரிமைகள் மறுப்பு போன்ற பல்வேறு சர்வாதிக்கார அடக்கு முறைகளை சிறுபான்மை தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள்  மீது  திட்டமிட்டு நடத்தி வருகிறது சிங்கள பேரினவாத அரசு

இந்நிலையில் கொழும்பு நகரின் முன்னாள் துணை மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான அஸத் ஸாலி அவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் நாட்டில் ஒரு வார இதழுக்கு கொடுத்த  பேட்டியை காரணமாக காட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது சிங்கள பேரினவாத இயக்கங்களின் அக்கிரமங்களை எதிர்த்து குரல் எழுப்பி வரும் மிகச் சிலரில் அஸத் ஸாலி முக்கியமானவர்.

இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சி என்று ராஜபக்சே மார்தட்டி கொண்டாலும் தினமும் ஏதாவது ஒரு செய்தி ராஜபக்சேவின் சர்வாதிகார ஆட்சியை அம்பலத்து கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. ஹிட்லரை யாரும் நேரில் பார்க்க வில்லையே என்று வருந்த வேண்டாம். ஹிட்லரை பார்க்க வேண்டுமா இலங்கைக்கு போங்கள். 

*ஒன்றரை இலட்சம் உயிர்களை வேட்டையாடிய மனித மிருகம்* 

தமிழ் போராளிகளின் நினைவு சிலைகள்..

kovil-1

சிங்கள காட்டுமிரண்டிள் நடத்திய கொடுரங்களுக்கு பின்னரும் இன வெறியை காட்டும் சிங்களம்.

ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு…

budha-war-in-eelam-946
அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள நாக விகாரை பௌத்த சங்கம் அதிர்ச்சிகரமான ஓர் அறிவித்தலை வெளியிட்டிருந்தது. யுத்தம் காரணமாக வீடழிந்த மக்கள் தமது காணிகளில் புத்த விகாரைகளை அமைக்க இடமளித்தால் அவர்களுக்கு மிக வசதியாக ஆறு லட்சம் ரூபா செலவில் வீடு அமைத்துத் தருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாண நகரத்தில் உள்ள நாக விகாரையும் ராணுவத்தினரும் இதன் அனுசரணையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்தம் காரணமாக நொந்து நலிந்து வீடற்று அழிவின் வெளியில் தவிக்கும் ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. புத்தர் சிலைகளைப் பரவலாக நட்டு பௌத்தத்தைப் பரப்பும் இந்த நடவடிக்கை எத்தகைய கொடுமையானது? இதை அறிவிக்கும் அளவிற்குத் தமிழர் நிலத்தில் சிங்கள இனவாதமும் பௌத்த மதவாதமும் தலையெடுத்திருக்கிறது.

ஐயா எப்படி பாடினரோ அப்படி பாடுங்கள் புலவர்களே!

perunchithiranar
தமிழ்த் தேசிய புலவர் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஈழத் தமிழர்களை கொன்றொழிக்க துணை நின்றவனை பழித்து 1988ம் ஆண்டு அறம் பாடிய செய்தியை நாமறிவோம். அவர் விட்ட சாபம் அடுத்த இரண்டாண்டுகளில் முட்டியது. புலவரின் சாபம் இன்னும் மிச்சமிருந்தாலும் புலவர் வாக்கு பொய்க்காது என நிரூபித்தவர் பெருஞ்சித்திரனார் ஐயா அவர்கள்.
அவர் வழிநின்று எவ்வாறு கொடியோனுக்கு அறம் பாடினாரோ அவ்வாறே சிங்களக் கொலைஞனுக்கும் அவர் சகாக்கலுக்கும் அறம் பாட மரந்துவிட்டோம் புலவர்களே. அதை நினைவிற்கொண்டு பெருஞ்சித்திரனார் ஐயா எப்படி பாடினரோ அப்படி பாடுங்கள். காலம்தாழ்த்தாதீர்.
பாடிய அறத்தை உடனடியாய் எமக்கு பகிருங்கள் நாங்கள் உலகத்தீர் முன்வைத்து பொய்யா மொழிப் புலவரை தேர்வு செய்வோம். உங்களுக்காக கருவூலத்தில் பெற்கிழிகள் காத்துகிடக்கின்றன.
இதோ ஐயாவின் பாடல் உங்கள் நினைவிற்கு

இட்ட சாபம் முட்டும்
சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித்திடவே
முந்து இராசீவ் எனும் முன்டையின் மகனே!
யாழ்த் தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!
நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் உலகத்து இருக்குநாள்தோறும்
என்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதளால்
வெந்தழியும் நாள் விரைந்துனக் கெய்துக!
இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரிஎனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூறாகச் சிதறுக! சூதனே!
திக்கி நா விழுக்க! நெஞ்சு தெறிக்க!
என்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயிர் துடிக்கையில் உனக்குளை நொய்ந்தே
முட்டுக நின்னுயிர்! மூளை நீ யாகுக!
தமிழினம் தகிக்கும் தருக்கனே! நின்குடி
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!
தணலும் எம் நெஞ்சின் தவிப்பை
மணல், நீர், தீ, வளி, வானம் – ஆற்றுகவே!

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

சிங்களத்தின் தூர நோக்குத் திட்ட வரைபுகள்!

திட்டமிட்ட இனவழிப்பை சிங்களம் நேற்று  முந்தையநாள் தொடங்கிய நிகழ்ச்சித் திட்டமல்ல. தமிழினம் சிங்களம் என்ற அடையாளத்தையும் மீறி சகல வழிகளாலும் தங்களைப் பின்தள்ளப் போகின்றது என்ற எதிர்கால சிக்கல்களை மனதில் கொண்டு தனது நகர்த்தல்களை நூற்றாண்டு காலங்களுக்கும் மேலாக நடாத்தி வந்து முள்ளிவாய்க்காலில் முக்கால் பங்கை நிறைவேற்றி பின் மிகுதி பங்கை சர்வதேசத்தின் துணையுடன் நிறைவேற்றி வைக்க மீண்டும் தனது தொடர் பயணத்தை ஆரம்பித்து விட்டது.
இவற்றையெல்லாம் பாதிப்புக்குள்ளாகும் தமிழினமும், தமிழின அரசியல் தலைமைகளும் எப்போது உணர்வார்கள் என்பது தான் பெரிய கேள்வி!
காலம் காலமாக தமிழினத்தின் மேல் பாய்ச்சிவரும் வன்முறைகளை சற்று ஆய்வுக்குட்படுத்தினால் ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
கிழக்கின் மேலாதிக்கம் 
1963 ம்  ஆண்டு மட்டக்களப்பிலிருந்து அம்பாறை என்ற தமிழருக்கு சொந்தமான நகரத்தை  புதிய மாவட்டமாக பிரிந்தமை ஒரு உற்று நோக்கக்கூடிய சிங்களத்தின் வன்முறை. அம்பாறை மாவட்டத்திற்குள் மட்டக்களப்பில் இருந்து பிரித்து இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ்பேசும் கிராமங்கள் அனைத்தும் வளம்மிக்கவை. அதன் செல்வங்களை தம் பால் ஈர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்குள் சேர்க்கப்பட்டன. அத்தோடு தமிழினத்தின் செறிவைக் குறைப்பதும் ஒரு நோக்கமாக இருந்தது.
இதன் முழு விபரங்களை பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.
இதே போன்று திருக்கோணமலை மாவட்டத்தில் கொட்டியாபுரப் பற்று என்ற முற்றுமுழுதான தமிழ்ப்பேசும் மக்களின் பூர்வீக மண்ணிலிருந்து பிரித்து சேருவில என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. கடல்வளமும் விவசாய வளமும் மிக்க பல கிராமங்கள் சேருவில என்ற பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டது.
அதைவிட குறித்துரைக்கப்படவேண்டியது யாதெனில், தற்போதைய சேருவிலப் பிரதேசத்தினுள் வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட மிகப்பழமைமிக்க தமிழர் ஆலயமான வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயமும், பிராமணர் குடியிருப்பு என்ற பெயர் பெற்ற பழமைமிக்க தமிழர் பிரதேசமான கந்தளாய் சிவனாலயமும் சேருவில என்ற சிங்களத் தொகுதியினுள் அடங்குகின்றது.(இதற்கு தமிழ்த்தலைமைகள் எப்படி நடந்து கொண்டார்க்ளால் என்ற வரலாற்றுத்தகவல் வெகு விரைவில் வெளியிடப்படும்.
சிங்களம் தமது மேலாதிக்கத்தை கோலோச்சுவதற்கு எடுத்த இரண்டாவது பெரிய நடவடிக்கை.
தமிழர் பூர்வீகங்கள் வெளிப்படுத்தப்படுமாயின் சிங்களத்தின் இருத்தலில் நிலைகுலைவு ஏற்படலாம் என்பதை முன்னுணர்ந்த சிங்களம் தமிழ்மக்களின் பூர்வீக வரலாற்றை தமிழ் மக்களுக்கே தெரியப்படுத்தவிடாமலும், வெளிப்படுத்த முயலும் சந்தர்ப்பங்களிலெல்லாம் முளையிலே கிள்ளி தடை போடுவதில் இன்றுவரை கவனமாக உள்ளார்கள்.
தமிழர்களின் பூர்வீக வரலாறு கூறும் இடங்களிலெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு நடைபெறுகின்றது. அதாவது குடியேற்றங்களை மேற்கொள்ளுமிடத்தில் பலபக்கமாக தமிழர்களின் தொண்டைக்குழியை அமுக்கி உண்மைகள் வெளிவராமல் முற்றுமுழுதாக சிங்களப்பிரதேசமாக பிரகடனப் படுத்த இலகுவாக இருக்கும் என்ற சிங்களத்தின் நம்பிக்கை இன்றுவரை வீண்போகவில்லை.
வடக்கின் மேலாதிக்கம் 
உலகில் எந்தவொரு இடத்திலும் மதத்தினூடாக இனத்தை வன்முறைக்குள் தூண்டி அரசியலில் கோலோச்சும் மேலாதிக்க நிகழ்வு இலங்கையை தவிர வேறெங்குமில்லை. வடக்கிலே உள்ள நாக விகாரை இதற்கொரு சான்று. இலங்கையின் ஆதிக்குடிகளாகிய நாகர் இனம் வாழ்ந்த அந்த இடம் மிகப்பெரிய சான்றாக அமைந்துவிடும் என்ற அச்சத்தில் அங்கே ஒரு பெளத்த விகாரைய ஸ்தாபித்து தங்கள் பிரதேசமென வெளிப்படுத்தி நாகர் வழித்தோன்றல்களையும், தமிழர்களையும் ஐதாக்கி மெளனிக்க வைத்திருக்கின்றார்கள்.
யாழ்ப்பாண நகரில் பிரதான சந்திகளையும் இடங்களையும் உற்று நோக்கின் அவ்வவ்விடங்களிலெல்லாம் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி(குறிப்பாக பாண் பேக்கரிகள், மோட்டார் கராஜ்சுகள்) தமிழ் மக்களை ஐதாக்கி சிங்களம் தனது காரியங்களை இலகுவாக நிறைவேற்றிக்கொண்டுள்ளது.
இலங்கையின் கண்களாக இருப்பது யாழ் கல்வி என்பது உலகறிந்த உண்மை. கல்விக்கூடாக வெளிச்சத்திற்கு வரும் புத்திஜீவிகளை தடுத்து  நிறுத்தவேண்டிய ஒரு வரலாற்றுத்தேவை சிங்களத்திற்கு இன்றுவரை உள்ளது. அதன் ஒரு பகுதிதான் 1981 இல் யாழ் நூலக எரிப்பு.
அந்நூலகத்தினுள் தமிழர் சார்ந்த புரான வரலாற்று உண்மைகள் பொதிந்து கிடந்தமை சிங்களத்தின் மேலாதிக்கத்திற்கு இடையூறு ஏற்படலாம் என்ற தூரநோக்கு சிந்தனையில் செயலாக்கம் பெற்றதுதான் அந்த நூலக எரிப்பு. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை தமிழரின் பூர்வீகம் பற்றி தமிழருக்கு தெரிந்ததை விட சிங்களத்திற்கு அதிகமாக தெரியும் என்பதே!
இதற்கான பிராயச்சித்த ஆய்வுகளை தமிழர்கள் ஒன்றுகூடி செயற்படுத்த முன்வரவேண்டும் என்பதைத்தவிர பூர்வீகத்தமிழர்களுக்கு நாம் செய்யும் கைமாறு வேறொன்றுமில்லை.
தியாகராசா முரளிநடேசன்
735133_369266453168924_1087577645_n
983822_386302898145577_1352951933_n

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் உண்மையான விளக்கம் தெரியுமா?


அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா?

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர். அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன். இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். இத்தகைய கர்ணனை தான் கொடைத் தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கும் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.