செவ்வாய், 11 நவம்பர், 2014

தமிழகம் செல்கையில் 14.04.1985இல்

தமிழகம் செல்கையில் 14.04.1985இல் தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவடைந்தவர்கள் .


**உங்களின் உன்னதமான சமர்களில் அளவிட முடியா உடல் வேதனைகளுடன் நீங்கள் கடலிலும்,தரையிலும் விதையாகிய போதிலும் உங்கள் இலட்சியங்கள் அழிந்து விடாமல் காப்பதற்காய் நாம் இறுதிவரை அற்ப்பமான அரசியல் வாழ்வில் கலந்து கொள்ளாது, உங்கள் இலட்சியப் பாதையில் பயணிப்போம்!!!!****

துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”

துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”

Maaveerarமீண்டும் தாயக மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.
* இரட்டைவாய்க்கால், ,விசுவமடு, ,முள்ளியவளை, கிளிநொச்சி, வன்னிவிளாங்குளம், ஆலம்குளம், ஈரப்பெரியகுளம், முளங்காவில், ஆட்காட்டிவெளி, பண்டிவிருச்சான், அளம்பில், உடுத்துறை, கோப்பாய், சாட்டி, கொடிகாமம், ஈச்சம்குளம், எள்ளாம் குளம், புதுவையாறு, மணலாறு, புடிமுகாம், தரவை, தாண்டியடி, சுண்டலடி, வாகரை, ஆலங்குளம், திருமலை, மாவடி முன்மாதிதி, கஞ்சிகுடிச்சாறு,பெரியகுளம், தியாகவனம், கோட்டைமாவடி
Maaveerar_Illam
என்கின்ற எங்கள் மாவீரர்களின் கோவில்கள் நிச்சயம் கருத்தரிக்கும்,
மயானங்கள் புதைகுழிகள் துயிலும் இல்லங்கள்
* இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடங்கள் என்ற வகையில் மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றுக்கும் ஒரே அர்த்தமே. ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவம் உடையவை. அவைகளின் தாற்பரியங்களும் வேறுபட்டவை.
மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறுதான். ஏனெனில், உண்மையில் துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.
மயானங்கள்
இயற்கையாகவோ அன்றி இயல்பான சூழலில் அனர்த்தமாகவோ இறந்தவரை அடக்கம் செய்யும் இடம் அல்லது ஈமக்கிரியைகள் செய்யும் இடமே மயானம். தீயிட்ட உடலின் சாம்பலைக் கடலில் கரைத்து இயற்கையுடன் இணைப்பது, அடக்கம் செய்த இடத்தில் சமாதியோ அல்லது சிலுவையோ அமைத்து திவசங்களின் போது அந்த இடத்தைக் கோயிலாகக் காண்பது, இஸ்லாமிய மதத்தவர் போல ஒன்றுமே நிறுவாமல் இயற்கையுடன் இணைப்பது – பள்ளிவாசலில் சிலைகள் படங்கள் எதுவும் இல்லை – அனைத்துமே இயற்கையுடன் – இறைவனுடன் – உடலைச் சங்கமமாக்கும் சம்பிரதாயம், மரபு.
தமிழினத்தில் பல மதங்கள் இருந்தாலும் அவை யாவும் இச் சமயத் தத்துவத்தில் ஒத்துப் போகின்றன.
புதைகுழிகள்
போர் விதிகளை வரையறை செய்துள்ள சாசனமான, ‘ஜெனீவா ஒப்பந்தம்”, இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்துலக நாடுகளாலும் ஏற்றுக் கைச்சாத்திடப்பட்டது. இதில் மருத்துவ மனைகள், கல்விக் கூடங்கள், அகதி முகாம்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை தாக்கப் படக்கூடாதவையாகவும், பொதுமக்கள், உதவி நிறுவனங்கள், நோயாளிகள் போன்ற பலர் தாக்கப் படக்கூடாதவர்களாகவும் வகைப்படுத்தி விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. போர்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது கூட விதியாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் கடந்த 50 ஆண்டுகளாகத் தம்மை ஆளும் அரசினாலும் மற்றவர்களாலும் சந்தித்த, இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரே இனம் என்ற வரலாற்றுச் சாதனைக்கு இலங்கைத் தமிழினம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் செய்தவர்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து – பூசி மெழுகி – உடல் அடக்கம் செய்யும் இடம் தான் புதைகுழிகள். துரையப்பா விளையாட்டரங்கு, செம்மணி, கைதடி இன்னும் எத்தனையோ? ஏன்றோ ஒருநாள் இவை அனைத்தும் தோண்டப்படும். அன்று உண்மை அம்பலமாகும் மயானத்துக்குப் போனவர்கள் நாலு பேருக்கு நன்றி சொன்னால் போதும். ஆனால் புதைகுழிக்குள் போனவர்கள் படைப் பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரம் இட்டவர்களுக்கும் பதில் சொல்லும் வரை போகவே மாட்டார்கள். உடல் தானே புதைக்கப்பட்டது. உயிரில்லையே.
துயிலும் இல்லங்கள்
Maaveerar_Kallaraikal
* போர்கள் நடந்து முடிவில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நினைவுத் தூபிகள் போரிட்ட நாடுகளின் நகரங்களில் முக்கிய இடங்களில் நிறுவப்படும். அவற்றில் போரில் உயிர் நீத்தவர்களின் பட்டியல் செதுக்கப் பட்டிருக்கும். ஆனால் போர் நடந்து முடியும் முன்னரே போரில் மரணித்த மீட்கப் பட்ட வீரர்களின் உடல்களைப் புதைத்தும், உடல்கள் மீட்கப்படாத மரணித்த வீரர்களை நினைத்தும் வேறு வேறு கிராமங்களில் தேர்ந்தெடுத்த இடங்களில் தூபிகளை அமைத்து – எம் வீரர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் இந்த இல்லங்களில் துயில்கிறார்கள். அவர்களின் உடல்கள் இங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன – என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இந்தச் சித்தாந்தத்தை விளக்கிட ‘விரித்திட விரித்திடப் பொருள் பலவாய் வெளிவந்தன வந்தன வந்தனவே” என்று பாரதியின் ‘தம்பி கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய் வளர்ந்தன வளர்ந்தனவே” பாஞ்சாலி சபத வரிகளிடம் அடி எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.
உடல்கள் விதைகள் என்றால் விதைத்த சில நாட்களில் அவை முளைத்துவிடும். அதாவது ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது பல போராளிகளல்லாதோர் மனங்களில் அந்த விதை வேர் விடுகிறது. போராளிகள் முளைப்பார்கள். ஓரணு உயிரினம் பலவாக Multiple Fission of cells என்ற வகையில் பெருகுவது போல. இது மேலே சொன்ன சித்தாந்தத்தின் ஒரு விரிவு.
அருச்சுனன் அபிமன்யுவுக்குச் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருக்கும் போதே வியூகங்களை உடைத்துச் செல்வதைக் கற்பித்தது போல, எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கர்ப்பத்திலேயே ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது, அவன் வித்துடல் துயிலும் இல்லங்களில் தகுந்த மரியாதையுடன் விதைக்கப் படும்போது, பல போராளிகள் வேர் விடுவார்கள். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் வேறொரு விரிவு.
எம் இன விடுதலைக்கு இந்த இளம் வயதில் போராளிகள் வாழ்வை அனுபவிக்காது உயிரைக் கொடுத்தார்களே! நாம் என்ன செய்தோம்? ஏன்ற வினாவை துயிலும் இல்லங்களுக்குச் செல்பவர்களின் உயிர்களில் கரைத்துவிடுகிறது. வேர் விடுகிறது. போராளிகள் மரணிக்கவில்லை. என்றால்தானே மறைந்த போராளிகளின் உயிர்கள் அங்கு செல்பவர்களின் உயிர்களுடன் உறவாட முடியும். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் பிறிதொரு முடிவு.
maverar illam kilinochi
maveerar_photos
மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தி ஒரு புறம் கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்ற வேதனை மறுபுறம். இச்செய்கையின் விளைவு செய்தவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே என்ற அவர்களின் அறியாமையைப் பார்த்த பரிதாபம். மறைந்த போராளிகளின் விதைகளில் முளைத்த மரங்கள் வெட்ட வெட்டத் துளிர்ப்பவை. அந்த மரங்கள் வேரோடு சாய்த்தாலும் நிலத்திலிருந்து முழுமையாகப் பிடுங்கப்படாத தும்பு வேர்களிலிருந்தும் முளைப்பவை.
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி” ஆனால், போராளிகளோ இருந்தால் ஆயிரம் பொன். இறந்தாலோ பல்லாயிரம் பொன். நினைவுகள் சிதைக்கப்பட்டால் கோடி பொன் என்பது புதுமொழி. இல்லை இல்லை. மேலே கூறிய சித்தாந்தத்தின் இன்னுமொரு விரிவு.
* ஒரு கோயில் கட்டுவதன் தாக்கத்தை விட அதை இடிப்பதன் தாக்கம் பல மடங்கு கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு கண்ணகி சிலை உடைக்கப்பட்டதன் தாக்கத்தைப் போன்றது. இதற்கு உதாரணமாக குழந்தையின் கையில் கரடிப் பொம்மை (Teddy Bear) என்று வேறொருவர் கூறியதைக் கலைஞரால் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. எப்படி அது சமிக்கும். இதே நிலையில் தான் ஈழத் தமிழ் நெஞ்சங்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தியைக் கேட்டுக் கொதிக்கின்றன.

தமிழ்த்தேசியம் என்றால் என்ன?







     

      .

    575387_277294599011654_1131444345_n.jpg
     
    தமிழ்த்தேசியம் என்றால் என்ன?
     

    ''மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது. உதாரணமாக, அல்ஜீரியாவில் இருந்து இந்தோனேஷியா வரை உள்ள முஸ்லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம். உருது மொழி பேசுபவர்கள் பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். வங்கதேசத்து முஸ்லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல. ஆகவே, திராவிடம் என்பதை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக்கொள்ள முடியாது. ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத் தேசிய இனம். கன்னடர்கள் கன்னடத் தேசிய இனம். தமிழர்கள் தமிழ்த் தேசிய இனம்தான்.

    மங்கோலியன் மரபினப் பகுதியில் சீனா, கொரியா, ரஷ்யா, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், ஜப்பானியர்கள் ஜப்பான் தேசிய இனம், சீனர்கள் சீனத் தேசிய இனம், கொரியர்கள் கொரியத் தேசிய இனம். இவை அனைத்தும் ஒரே மங்கோலியத் தேசிய இனமாக உருவெடுத்து விடவில்லை.

    தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது. நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை, இலக்கியம், பொதுப் பழக்கவழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை. இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம். தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதுவே. இதைத் தான் நாங்கள் பேசுகிறோம்!''

    -- அய்யா பழ.நெடுமாறன் விகடன் மேடையில் --

    ஞாயிறு, 9 நவம்பர், 2014

    மாவீரர் நாள் கையேடுமாவீரர் நாள் (நவம்பர் 27)

    தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தமிழீழ எல்லைப் பரப்புக்கள் எங்கும் ( கடலிலும், தரையிலும், வானிலுமாக,) எதிரியின் தேசத்திலும் எதிரிகளின்  பாசறைகளை, கடற் கலங்களை, வானூர்திகளை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும், சத்திய வேள்வியில் நித்தமும் வேகி, தமிழர் தேசத்தை சூழ்ந்திருந்த அந்நியப்படைகளை விரட்டியடித்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிரினை ஈய்ந்து, உடலை உரமிட்டு, செங்குருதியால் வரலாறு படைத்து, மாவீரர்களாக தமிழீழ தேசம் எங்கும்,காவல்த் தெய்வங்களாக துயிலும் இல்லங்களிலும், யுத்தம் நடைபெற்ற கள முனைகளிலும்,  தமிழீழத்தின் கடல் அன்னையின் மடியினிலும் நித்திய துயில் கொள்பவர்கள் எங்கள் மாவீரர்கள். 
    தமிழீழ தேசத்தின் புனிதர்களான அந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும், மாவீரர்களின் உறவுகளான குடும்பத்தினர்களும், மாவீரர்களை நினைத்து தலைமிரும் நாளாகவும், மாவீரர்களின் பெற்றோர்கள் அவலப்படக் கூடாது, மாறாக அவர்கள் தமிழீழ மக்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலும் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நோக்கின் அடிப்படையில் தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.
    தமிழீழ தேசத்தின் வீரப் புதல்வர்கள்
    தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தமிழீழ எல்லைப் பரப்புக்கள் எங்கும் ( கடலிலும், தரையிலும், வானிலுமாக,) எதிரியின் தேசத்திலும் எதிரிகளின் பாசறைகளை, கடற் கலங்களை, வானூர்திகளை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும், சத்திய வேள்வியில் நித்தமும் வேகி, தமிழர் தேசத்தை சூழ்ந்திருந்த அந்நியப்படைகளை விரட்டியடித்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிரினை ஈய்ந்து, உடலை உரமிட்டு, செங்குருதியால் வரலாறு படைத்து, மாவீரர்களாக தமிழீழ தேசம் எங்கும்,காவல்த் தெய்வங்களாக துயிலும் இல்லங்களிலும், யுத்தம் நடைபெற்ற கள முனைகளிலும், தமிழீழத்தின் கடல் அன்னையின் மடியினிலும் நித்திய துயில் கொள்பவர்கள் எங்கள் மாவீரர்கள்.
    இன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் எங்கும், வீர விதைகளாக, நினைவுக் கற்களாக, நினைவுச் சிலைகளாக, உருவச் சிலைகளாக, ஓவியமாய், வெள்ளை மலரேந்திய வேதங்களாய், ஈழமண்ணின் போராட்ட வரலாறுகளாய், ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதிப் பிழம்பாய் நிமிர்ந்து நிற்பவரே மாவீரகள்!
    தாகம் அடங்கிடத் தமிழீழம் கேட்டீர்!
    தடை அகன்றிட காற்றிலே கலந்தீர்!
    எல்லை வரைந்திட இரத்தமாய் சொரிந்தீர்!
    தேசம் பிறந்திட உயிரையே கொடுத்தீர்!
    தமிழீழம் மீட்டு, தமிழீழத் தனி அரசை நிறுவி-
    தமிழ்மானம் காக்கவே உயிர்கொடுத்தவர்கள் மாவீரர்களே!
    ஏன் இவர்கள் மாவீரர்கள்?
    *தமிழின விடிவுக்காய் மரணித்தவர்கள்.
    *தேசம் தூங்கிய போது விழித்திருந்தவர்கள்.
    *உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள்.
    *தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள்.
    *பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள்.
    *ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள்.
    *எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள்.
    *தமது மக்களுக்காய் களமுனைகளில் கண்களை கால்களை, கரங்கைளை இழந்து நின்ற வேளையிலும் தேச விடுதலைக்காய் வீரச் சாவடைந்த வீர மறவர்கள் தான் மாவீரர்கள்!
    தமிழீழ விடுதலைக்காய் களமாடி வித்தாகி வீழ்ந்த தமிழீழ தேசத்தின் மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் உறுதிப்பாடாயிற்று. இவ் நினைவெழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின், போர் வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரன் லெப்ரினன் சங்கர், செல்வச்சந்திரன் சத்தியநாதன், (சுரேஷ்) அவர்கள் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாளை தமிழீழ தேசம் தமிழீழ மாவீரர் நாளாக பிரகடனம் செய்துள்ளது.
    1982. ஆம் ஆண்டு நவம்பர் மாதம்20,ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், முற்றுகையை உடைத்து வெளியேறிய தாக்குதலில் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நவம்பர்-27 ஆம் நாள் மாலை 6.மணி, 5நிமிடமளவில் தலைவர்.வே.பிரபாகரன் அவர்களின் மடியில் சங்கர் அவர்கள் முதல் வித்தாக வீரச்சாவடைந்தார்.
    சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த நவம்பர்-27 ஆம் நாளே வருடந் தோறும் தமிழீழத்தின் எழுச்சி நாளாகவும், புனித நாளாகவும், தமிழினம் உணர்வு பூர்வமாக நெய் விளக்கேற்றி  வணங்கி, மாவீரர்களை நினைவுகூருகின்றது.
    மாவீரர் நாளை நெறிப்படுத்துதல்.
    மாவீரர் நாளானது, மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழம் எங்கும் நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் திகதி நிறைவடைகிறது. மாவீரர் எழுச்சி நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னரே தமிழீழ தேசம் எங்கும் புனிதப்படுத்தப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுவிடும்.
    தமிழீழ தேசமெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் மாவீரர் நினைவுத் தூபிகள், நினைவாலையங்கள், நிழற்படங்கள் அமைந்த இடங்கள், இல்லங்கள், ஒழுங்கைகள், வீதிகள், கல்விக் கூடங்கள், பொது இடங்கள், காரியாலயங்கள், அனைத்தையுமே மக்கள் அனைவரும் தனித்துவமாகவும், ஒருமித்தும் புனிதமாக்கி, மாவீரர் நினைவாக எமது தேசிய வர்ணக் கொடிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும்
    மாவீரர் எழுச்சி நாட்கள் 25 -27
    ஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு புதுப் பொலிவுடன் மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து காட்சி தரும்.
    தமிழீழ மக்கள் அனைவரும் அலங்கரிப்பு நிகழ்வுகளிலும், வீரவணக்க நிகழ்வுகளிலும் உணர்வு பூர்வமாக, கலந்துகொள்வார்கள்.
    வேறு வகையான களியாட்டங்கள், கொண்டாட்டங்கள், அனைத்தையும் மக்கள் தவிர்த்துக் கொள்வார்கள். தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்து விடும்.
    மதுச்சாலைகள் மூடப்பட்டு, மது பாவிப்பதை நிறுத்தி விடுவார்கள். வீடுகள் தோறும் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கும். மக்கள் குழுக்களாகவும், அமைப்புக்கள் ரீதியாக, மாவீரகளின் நினைவுகளை தங்கிநிற்கும் வகையிலான ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும், மற்றும் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.
    பாடசாலைகள்
    ஆசிரியர்கள் மாவீரர்களின் மான்பினையும், மாவீரர் நாளின் மகிமையையும், அதன் புனிதத் தன்மைகளையும் மாணவர்களுக்கு கற்பித்து, எழுச்சி நிகழ்வுகளுக்கு மாணவர்களை நவம்பர் 25, ஆம் திகதிக்கு முன்னரே தயார்படுத்தி விடுவார்கள்.
    பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நவம்பர் 25 ஆம் நாள் காலை 9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும், பாடசாலைகளில் மாவீரர்கள் தொடர்பான எழுச்சி வணக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.
    ஒட்டுமொத்த தமிழ் மக்களும், போராளிகளும், மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதில்  ஆசிரியர்கள், மாணவர்ளும், பொது மக்களும், பொது நிறுவனங்களும், கிரமா முன்னேற்றச் சங்கங்களும், சனசமூக நிலையங்களும் முழுமையாக இணைவதின் ஊடாக தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.
    தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27
    தமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அனைவரையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தமிழீழ மக்கள் தலைசாய்த்து வணக்கம் செலுத்தும் நாளாகவும், மாவீரர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும், தியாகங்களும் அருஞ் செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
    தமிழீழ தேசத்தின் புனிதர்களான அந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும், மாவீரர்களின் உறவுகளான குடும்பத்தினர்களும், மாவீரர்களை நினைத்து தலைமிரும் நாளாகவும், மாவீரர்களின் பெற்றோர்கள் அவலப்படக் கூடாது, மாறாக அவர்கள் தமிழீழ மக்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலும் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நோக்கின் அடிப்படையில் தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.
    தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப் போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து, நூறு, ஆயிரம் என்ற நிலை மாறி, பல்லாயிரமாக உயர்ந்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரக் கூடியதாக ஒரு பொதுவான நாளை தெரிவுசெய்த தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை பிரகடனம் செய்திருந்தார்.
    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரன் லெப்ரினன் சங்கர், செல்வச்சந்திரன் சத்தியநாதன், (சுரேஷ்) அவர்களின் நினைவு நாளான நவம்பர்-27 ஆம் நாளை தமிழீழ தேசம் தமிழீழ மாவீரர் நாளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
    விடுதலைப் போராட்டத்தில் உலகம் வியக்கும் வகையிலே புதிய வரலாறு படைத்து புதுமை சேர்த்து நிற்கும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மண் மீட்புப் போரிலே பல வெற்றிகளைக் குவித்துவரும் அதே நேரம் நாட்டை எல்லாத் துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களைத் தீட்டி வழிகாட்டி இயங்கி வருவதோடு தூய்மையான தேசிய விடுதலைப் போரை வீறோடு நடாத்தி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களைப் போற்றி நினைவில் நிறுத்தவும் அவர்களது பெற்றோரும் குடும்பத்தினரும் அல்லலுறும் நிலையை மாற்றவும் எனப் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.
    1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
    ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகள் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.
    ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் எதிரியின் அச்சுறுத்தல்கள் தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும், போராட்டத்தையும் நடாத்திக்கொண்டு தமிழ் மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
    வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு, நடுகற்கள் நாட்டப்பட்டு போற்றப்படுகிறார்கள். மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகில் எங்குமே தமிழீழ மாவீரர் நினைவுபோல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர்களின் பெற்றொரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ நடைபெறுவதாகவோ வரலாறில்லை.
    மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும் நடைமுறை ஒழுங்குகளும்
    1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
    தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வு ஆரம்பமாகும்.
    மாவீரர் எழுச்சி நாள் தொடக்க நிகழ்வுகள்
    01. சுடரேற்றல்
    02. தேசியக் கொடியேற்றல்
    03. அக வணக்கம்
    04. மலர் வணக்கம்
    05. நினைவுரைகள்
    06. உறுதியுரை
    என்பன வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும். தொடக்க நிகழ்வுகள் மாவீரர் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.
    தேசியக் கொடி ஏற்றல்
    மாவீரர் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாளன்று காலை 8.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகும். மாவீரர் துயிலும் இல்லங்களில் 25 ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஏற்றப்படும் தேசியக் கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.
    இயக்கப் பணிமனைகள் தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும். நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.
    பொது நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின், நண்பகல், 12.01 இன் பின்பாகவும்இ மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக் கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலையில் ஏற்றப்பட வேண்டும்.
    (தேசியக்கொடி ஏற்றுதல், இறக்குதல் தொடர்பான கூடுதலான விளக்கங்கள் தேசியக் கொடிப் பயன்பாட்டு விதிக் கோவை என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.)
    மாவீரர்கள் நினைவாக நினைவு ஒலி எழுப்பலும், சுடர் ஏற்றலும்
    27ஆந் திகதி சுடரேற்றும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். மாலை 6.05 மணிக்கு தமிழீழமெங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.
    துயிலும் இல்லத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் பீடத்தில் மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வுக் கொந்தளிப்போடு துயிலும் இல்ல வளாகத்தில் நின்று மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் நினைந்துருக சுடர் ஏற்றப்படும்.
    அமைப்பின் முதன்மையானவர்கள் பிரதான சுடரை ஏற்றிவைக்க, சமகாலத்தில் மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையவர்கள் சுடரை ஏற்றி மாவீரர்களை வணங்கி நிற்பார்கள். சமகாலத்தில் தமிழீழ பிரதேசத்திலும், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடங்களிலும், ஒவ்வொரு தமிழர்களின் இல்லங்களிலும் நினைவுச் சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தி உறுதி எடுத்துக் கொள்வார்கள்.
    சுவாலை விட்டெரியும் ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப் பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர் விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.
    சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவு கூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல மாவீரர் நினைவுச் சுடர்கள் 6.07 மணிக்கு சம நேரத்தில் தமிழீழ தேசம் எங்கும், அதேவேளை தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒளிர வேண்டும்.
    சிட்டி விளக்கேற்றக்கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீப்பந்தங்கள் ஏற்றியும் பொது இடங்களில் பொதுச் சுடர்களை ஏற்றியும் நினைவுகூர வேண்டும். இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப் பாதைக்கு உறுதியையும் உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.
    நவம்பர் 27 மாலை பிரதான நிகழ்வுகள்.
    *தமிழீழ தேசியத் தலைவரின் உரை
    *நினைவு ஒலி எழுப்புதல்-(6.05 மணி)
    *அக வணக்கம்,-(6.06 மணி)
    *ஈகைச் சுடரேற்றுதல்,-(6.07 மணி)
    தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் நினைவுரை (கொள்கைப் பிரகடன உரை)
    மாலை 6.05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வு ஆரம்பமாகும் வகையில், 6.05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வுக்கு முன்பாக தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் நினைவுரை நிகழ்வு இடம்பெறும்.
    நினைவு ஒலி எழுப்புதல்-(6.05 மணி)
    தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்ததும் 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் நினைவு ஒலி ஒரு மணித்துளி நேரம் தொடர்ச்சியாக எழுப்பப்படும். உயிர்காப்புப் பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.
    அக வணக்கம்-(6.06 மணி)
    மாவீரர்களுக்கான நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வு நிறைவடைந்தவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அக வணக்கம் செலுத்தப்படும். சம நேரத்தில் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்.
    ஈகைச் சுடரேற்றுதல்-(6.07 மணி)
    அகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படுதல் வேண்டும். (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடரேற்ற வேண்டிய கல்லறைகள் நினைவுக் கற்களுக்கு முன்னால் 5.45 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)
    மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள், நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினர், மற்றும் உருத்துடையோரும், நாட்டின் சூல்நிலை காரணமாக இடம் பெயர்ந்த மாவீரர் பெற்றோர்களுக்கென, துயிலும் இல்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரதான நினைவிடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்கள்.
    தமிழீழத்தின் எல்லைகளிலும், பாசறைகளிலும், கடமைகளில் இருக்கும் போராளிகள் அவர்கள் இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான இடங்களில் நினைவு ஒலி எழுப்பி, அகவணக்கம் செலுத்தி, நினைவுத் தீபம் ஏற்றி மாவீரர்களை வணங்குவார்கள்.
    இவை தவிர துயிலும் இல்லங்களுக்கு வர முடியாத மக்கள் தமது இல்லங்கள், மற்றும் பொது இடங்கள், அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள், போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரிய முறைப்படி ஈகைச் சுடரேற்றுவர். ஈகைச் சுடரேற்றும் போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும்.
    குறிப்பாக (மாவீரர் ஈகைச் சுடர் ஏற்றப்படும் நேரத்தில், அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாது. வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறு வகையில் ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.)
    போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும்
    எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.
    உங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும் எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம் அவர்களின் உணர்வுகள் இலட்சிய தாகம் கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகவும் புனிதத் தன்மை வாய்ந்தவையுமாகும். காலம் காலமாக நினைவுகூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.
    இம்மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழி நடாத்தும் உந்துசக்தியாக என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது. எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்து வரல் வேண்டும்.
    இந்த எமக்குரிய உயரிய நிகழ்வைத் தத்துவார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ஒருங்கிணைந்த பங்களிப்புக்களை வேண்டி நிற்கின்றோம்.
    புலிகளின் தாகம் தமிழீழத் தயாகம்
    நன்றி

    மாவீரர் நாள் கையேடுமாவீரர் நாள் (நவம்பர் 27)

    தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தமிழீழ எல்லைப் பரப்புக்கள் எங்கும் ( கடலிலும், தரையிலும், வானிலுமாக,) எதிரியின் தேசத்திலும் எதிரிகளின்  பாசறைகளை, கடற் கலங்களை, வானூர்திகளை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும், சத்திய வேள்வியில் நித்தமும் வேகி, தமிழர் தேசத்தை சூழ்ந்திருந்த அந்நியப்படைகளை விரட்டியடித்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிரினை ஈய்ந்து, உடலை உரமிட்டு, செங்குருதியால் வரலாறு படைத்து, மாவீரர்களாக தமிழீழ தேசம் எங்கும்,காவல்த் தெய்வங்களாக துயிலும் இல்லங்களிலும், யுத்தம் நடைபெற்ற கள முனைகளிலும்,  தமிழீழத்தின் கடல் அன்னையின் மடியினிலும் நித்திய துயில் கொள்பவர்கள் எங்கள் மாவீரர்கள். 
    தமிழீழ தேசத்தின் புனிதர்களான அந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும், மாவீரர்களின் உறவுகளான குடும்பத்தினர்களும், மாவீரர்களை நினைத்து தலைமிரும் நாளாகவும், மாவீரர்களின் பெற்றோர்கள் அவலப்படக் கூடாது, மாறாக அவர்கள் தமிழீழ மக்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலும் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நோக்கின் அடிப்படையில் தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.
    தமிழீழ தேசத்தின் வீரப் புதல்வர்கள்
    தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தமிழீழ எல்லைப் பரப்புக்கள் எங்கும் ( கடலிலும், தரையிலும், வானிலுமாக,) எதிரியின் தேசத்திலும் எதிரிகளின் பாசறைகளை, கடற் கலங்களை, வானூர்திகளை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும், சத்திய வேள்வியில் நித்தமும் வேகி, தமிழர் தேசத்தை சூழ்ந்திருந்த அந்நியப்படைகளை விரட்டியடித்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிரினை ஈய்ந்து, உடலை உரமிட்டு, செங்குருதியால் வரலாறு படைத்து, மாவீரர்களாக தமிழீழ தேசம் எங்கும்,காவல்த் தெய்வங்களாக துயிலும் இல்லங்களிலும், யுத்தம் நடைபெற்ற கள முனைகளிலும், தமிழீழத்தின் கடல் அன்னையின் மடியினிலும் நித்திய துயில் கொள்பவர்கள் எங்கள் மாவீரர்கள்.
    இன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் எங்கும், வீர விதைகளாக, நினைவுக் கற்களாக, நினைவுச் சிலைகளாக, உருவச் சிலைகளாக, ஓவியமாய், வெள்ளை மலரேந்திய வேதங்களாய், ஈழமண்ணின் போராட்ட வரலாறுகளாய், ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதிப் பிழம்பாய் நிமிர்ந்து நிற்பவரே மாவீரகள்!
    தாகம் அடங்கிடத் தமிழீழம் கேட்டீர்!
    தடை அகன்றிட காற்றிலே கலந்தீர்!
    எல்லை வரைந்திட இரத்தமாய் சொரிந்தீர்!
    தேசம் பிறந்திட உயிரையே கொடுத்தீர்!
    தமிழீழம் மீட்டு, தமிழீழத் தனி அரசை நிறுவி-
    தமிழ்மானம் காக்கவே உயிர்கொடுத்தவர்கள் மாவீரர்களே!
    ஏன் இவர்கள் மாவீரர்கள்?
    *தமிழின விடிவுக்காய் மரணித்தவர்கள்.
    *தேசம் தூங்கிய போது விழித்திருந்தவர்கள்.
    *உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள்.
    *தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள்.
    *பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள்.
    *ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள்.
    *எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள்.
    *தமது மக்களுக்காய் களமுனைகளில் கண்களை கால்களை, கரங்கைளை இழந்து நின்ற வேளையிலும் தேச விடுதலைக்காய் வீரச் சாவடைந்த வீர மறவர்கள் தான் மாவீரர்கள்!
    தமிழீழ விடுதலைக்காய் களமாடி வித்தாகி வீழ்ந்த தமிழீழ தேசத்தின் மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் உறுதிப்பாடாயிற்று. இவ் நினைவெழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின், போர் வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரன் லெப்ரினன் சங்கர், செல்வச்சந்திரன் சத்தியநாதன், (சுரேஷ்) அவர்கள் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாளை தமிழீழ தேசம் தமிழீழ மாவீரர் நாளாக பிரகடனம் செய்துள்ளது.
    1982. ஆம் ஆண்டு நவம்பர் மாதம்20,ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், முற்றுகையை உடைத்து வெளியேறிய தாக்குதலில் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நவம்பர்-27 ஆம் நாள் மாலை 6.மணி, 5நிமிடமளவில் தலைவர்.வே.பிரபாகரன் அவர்களின் மடியில் சங்கர் அவர்கள் முதல் வித்தாக வீரச்சாவடைந்தார்.
    சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த நவம்பர்-27 ஆம் நாளே வருடந் தோறும் தமிழீழத்தின் எழுச்சி நாளாகவும், புனித நாளாகவும், தமிழினம் உணர்வு பூர்வமாக நெய் விளக்கேற்றி  வணங்கி, மாவீரர்களை நினைவுகூருகின்றது.
    மாவீரர் நாளை நெறிப்படுத்துதல்.
    மாவீரர் நாளானது, மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழம் எங்கும் நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் திகதி நிறைவடைகிறது. மாவீரர் எழுச்சி நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னரே தமிழீழ தேசம் எங்கும் புனிதப்படுத்தப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுவிடும்.
    தமிழீழ தேசமெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் மாவீரர் நினைவுத் தூபிகள், நினைவாலையங்கள், நிழற்படங்கள் அமைந்த இடங்கள், இல்லங்கள், ஒழுங்கைகள், வீதிகள், கல்விக் கூடங்கள், பொது இடங்கள், காரியாலயங்கள், அனைத்தையுமே மக்கள் அனைவரும் தனித்துவமாகவும், ஒருமித்தும் புனிதமாக்கி, மாவீரர் நினைவாக எமது தேசிய வர்ணக் கொடிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும்
    மாவீரர் எழுச்சி நாட்கள் 25 -27
    ஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு புதுப் பொலிவுடன் மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து காட்சி தரும்.
    தமிழீழ மக்கள் அனைவரும் அலங்கரிப்பு நிகழ்வுகளிலும், வீரவணக்க நிகழ்வுகளிலும் உணர்வு பூர்வமாக, கலந்துகொள்வார்கள்.
    வேறு வகையான களியாட்டங்கள், கொண்டாட்டங்கள், அனைத்தையும் மக்கள் தவிர்த்துக் கொள்வார்கள். தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்து விடும்.
    மதுச்சாலைகள் மூடப்பட்டு, மது பாவிப்பதை நிறுத்தி விடுவார்கள். வீடுகள் தோறும் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கும். மக்கள் குழுக்களாகவும், அமைப்புக்கள் ரீதியாக, மாவீரகளின் நினைவுகளை தங்கிநிற்கும் வகையிலான ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும், மற்றும் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.
    பாடசாலைகள்
    ஆசிரியர்கள் மாவீரர்களின் மான்பினையும், மாவீரர் நாளின் மகிமையையும், அதன் புனிதத் தன்மைகளையும் மாணவர்களுக்கு கற்பித்து, எழுச்சி நிகழ்வுகளுக்கு மாணவர்களை நவம்பர் 25, ஆம் திகதிக்கு முன்னரே தயார்படுத்தி விடுவார்கள்.
    பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நவம்பர் 25 ஆம் நாள் காலை 9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும், பாடசாலைகளில் மாவீரர்கள் தொடர்பான எழுச்சி வணக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.
    ஒட்டுமொத்த தமிழ் மக்களும், போராளிகளும், மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதில்  ஆசிரியர்கள், மாணவர்ளும், பொது மக்களும், பொது நிறுவனங்களும், கிரமா முன்னேற்றச் சங்கங்களும், சனசமூக நிலையங்களும் முழுமையாக இணைவதின் ஊடாக தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.
    தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27
    தமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அனைவரையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தமிழீழ மக்கள் தலைசாய்த்து வணக்கம் செலுத்தும் நாளாகவும், மாவீரர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும், தியாகங்களும் அருஞ் செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
    தமிழீழ தேசத்தின் புனிதர்களான அந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும், மாவீரர்களின் உறவுகளான குடும்பத்தினர்களும், மாவீரர்களை நினைத்து தலைமிரும் நாளாகவும், மாவீரர்களின் பெற்றோர்கள் அவலப்படக் கூடாது, மாறாக அவர்கள் தமிழீழ மக்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலும் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நோக்கின் அடிப்படையில் தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.
    தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப் போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து, நூறு, ஆயிரம் என்ற நிலை மாறி, பல்லாயிரமாக உயர்ந்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரக் கூடியதாக ஒரு பொதுவான நாளை தெரிவுசெய்த தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை பிரகடனம் செய்திருந்தார்.
    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரன் லெப்ரினன் சங்கர், செல்வச்சந்திரன் சத்தியநாதன், (சுரேஷ்) அவர்களின் நினைவு நாளான நவம்பர்-27 ஆம் நாளை தமிழீழ தேசம் தமிழீழ மாவீரர் நாளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
    விடுதலைப் போராட்டத்தில் உலகம் வியக்கும் வகையிலே புதிய வரலாறு படைத்து புதுமை சேர்த்து நிற்கும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மண் மீட்புப் போரிலே பல வெற்றிகளைக் குவித்துவரும் அதே நேரம் நாட்டை எல்லாத் துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களைத் தீட்டி வழிகாட்டி இயங்கி வருவதோடு தூய்மையான தேசிய விடுதலைப் போரை வீறோடு நடாத்தி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களைப் போற்றி நினைவில் நிறுத்தவும் அவர்களது பெற்றோரும் குடும்பத்தினரும் அல்லலுறும் நிலையை மாற்றவும் எனப் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.
    1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
    ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகள் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.
    ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் எதிரியின் அச்சுறுத்தல்கள் தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும், போராட்டத்தையும் நடாத்திக்கொண்டு தமிழ் மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
    வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு, நடுகற்கள் நாட்டப்பட்டு போற்றப்படுகிறார்கள். மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகில் எங்குமே தமிழீழ மாவீரர் நினைவுபோல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர்களின் பெற்றொரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ நடைபெறுவதாகவோ வரலாறில்லை.
    மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும் நடைமுறை ஒழுங்குகளும்
    1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
    தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வு ஆரம்பமாகும்.
    மாவீரர் எழுச்சி நாள் தொடக்க நிகழ்வுகள்
    01. சுடரேற்றல்
    02. தேசியக் கொடியேற்றல்
    03. அக வணக்கம்
    04. மலர் வணக்கம்
    05. நினைவுரைகள்
    06. உறுதியுரை
    என்பன வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும். தொடக்க நிகழ்வுகள் மாவீரர் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.
    தேசியக் கொடி ஏற்றல்
    மாவீரர் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாளன்று காலை 8.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகும். மாவீரர் துயிலும் இல்லங்களில் 25 ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஏற்றப்படும் தேசியக் கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.
    இயக்கப் பணிமனைகள் தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும். நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.
    பொது நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின், நண்பகல், 12.01 இன் பின்பாகவும்இ மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக் கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலையில் ஏற்றப்பட வேண்டும்.
    (தேசியக்கொடி ஏற்றுதல், இறக்குதல் தொடர்பான கூடுதலான விளக்கங்கள் தேசியக் கொடிப் பயன்பாட்டு விதிக் கோவை என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.)
    மாவீரர்கள் நினைவாக நினைவு ஒலி எழுப்பலும், சுடர் ஏற்றலும்
    27ஆந் திகதி சுடரேற்றும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். மாலை 6.05 மணிக்கு தமிழீழமெங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.
    துயிலும் இல்லத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் பீடத்தில் மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வுக் கொந்தளிப்போடு துயிலும் இல்ல வளாகத்தில் நின்று மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் நினைந்துருக சுடர் ஏற்றப்படும்.
    அமைப்பின் முதன்மையானவர்கள் பிரதான சுடரை ஏற்றிவைக்க, சமகாலத்தில் மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையவர்கள் சுடரை ஏற்றி மாவீரர்களை வணங்கி நிற்பார்கள். சமகாலத்தில் தமிழீழ பிரதேசத்திலும், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடங்களிலும், ஒவ்வொரு தமிழர்களின் இல்லங்களிலும் நினைவுச் சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தி உறுதி எடுத்துக் கொள்வார்கள்.
    சுவாலை விட்டெரியும் ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப் பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர் விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.
    சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவு கூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல மாவீரர் நினைவுச் சுடர்கள் 6.07 மணிக்கு சம நேரத்தில் தமிழீழ தேசம் எங்கும், அதேவேளை தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒளிர வேண்டும்.
    சிட்டி விளக்கேற்றக்கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீப்பந்தங்கள் ஏற்றியும் பொது இடங்களில் பொதுச் சுடர்களை ஏற்றியும் நினைவுகூர வேண்டும். இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப் பாதைக்கு உறுதியையும் உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.
    நவம்பர் 27 மாலை பிரதான நிகழ்வுகள்.
    *தமிழீழ தேசியத் தலைவரின் உரை
    *நினைவு ஒலி எழுப்புதல்-(6.05 மணி)
    *அக வணக்கம்,-(6.06 மணி)
    *ஈகைச் சுடரேற்றுதல்,-(6.07 மணி)
    தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் நினைவுரை (கொள்கைப் பிரகடன உரை)
    மாலை 6.05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வு ஆரம்பமாகும் வகையில், 6.05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வுக்கு முன்பாக தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் நினைவுரை நிகழ்வு இடம்பெறும்.
    நினைவு ஒலி எழுப்புதல்-(6.05 மணி)
    தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்ததும் 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் நினைவு ஒலி ஒரு மணித்துளி நேரம் தொடர்ச்சியாக எழுப்பப்படும். உயிர்காப்புப் பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.
    அக வணக்கம்-(6.06 மணி)
    மாவீரர்களுக்கான நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வு நிறைவடைந்தவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அக வணக்கம் செலுத்தப்படும். சம நேரத்தில் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்.
    ஈகைச் சுடரேற்றுதல்-(6.07 மணி)
    அகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படுதல் வேண்டும். (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடரேற்ற வேண்டிய கல்லறைகள் நினைவுக் கற்களுக்கு முன்னால் 5.45 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)
    மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள், நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினர், மற்றும் உருத்துடையோரும், நாட்டின் சூல்நிலை காரணமாக இடம் பெயர்ந்த மாவீரர் பெற்றோர்களுக்கென, துயிலும் இல்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரதான நினைவிடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்கள்.
    தமிழீழத்தின் எல்லைகளிலும், பாசறைகளிலும், கடமைகளில் இருக்கும் போராளிகள் அவர்கள் இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான இடங்களில் நினைவு ஒலி எழுப்பி, அகவணக்கம் செலுத்தி, நினைவுத் தீபம் ஏற்றி மாவீரர்களை வணங்குவார்கள்.
    இவை தவிர துயிலும் இல்லங்களுக்கு வர முடியாத மக்கள் தமது இல்லங்கள், மற்றும் பொது இடங்கள், அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள், போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரிய முறைப்படி ஈகைச் சுடரேற்றுவர். ஈகைச் சுடரேற்றும் போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும்.
    குறிப்பாக (மாவீரர் ஈகைச் சுடர் ஏற்றப்படும் நேரத்தில், அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாது. வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறு வகையில் ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.)
    போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும்
    எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.
    உங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும் எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம் அவர்களின் உணர்வுகள் இலட்சிய தாகம் கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகவும் புனிதத் தன்மை வாய்ந்தவையுமாகும். காலம் காலமாக நினைவுகூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.
    இம்மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழி நடாத்தும் உந்துசக்தியாக என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது. எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்து வரல் வேண்டும்.
    இந்த எமக்குரிய உயரிய நிகழ்வைத் தத்துவார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ஒருங்கிணைந்த பங்களிப்புக்களை வேண்டி நிற்கின்றோம்.
    புலிகளின் தாகம் தமிழீழத் தயாகம்
    நன்றி

    மாவீரர் நாள் கையேடுமாவீரர் நாள் (நவம்பர் 27)

    தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தமிழீழ எல்லைப் பரப்புக்கள் எங்கும் ( கடலிலும், தரையிலும், வானிலுமாக,) எதிரியின் தேசத்திலும் எதிரிகளின்  பாசறைகளை, கடற் கலங்களை, வானூர்திகளை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும், சத்திய வேள்வியில் நித்தமும் வேகி, தமிழர் தேசத்தை சூழ்ந்திருந்த அந்நியப்படைகளை விரட்டியடித்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிரினை ஈய்ந்து, உடலை உரமிட்டு, செங்குருதியால் வரலாறு படைத்து, மாவீரர்களாக தமிழீழ தேசம் எங்கும்,காவல்த் தெய்வங்களாக துயிலும் இல்லங்களிலும், யுத்தம் நடைபெற்ற கள முனைகளிலும்,  தமிழீழத்தின் கடல் அன்னையின் மடியினிலும் நித்திய துயில் கொள்பவர்கள் எங்கள் மாவீரர்கள். 
    தமிழீழ தேசத்தின் புனிதர்களான அந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும், மாவீரர்களின் உறவுகளான குடும்பத்தினர்களும், மாவீரர்களை நினைத்து தலைமிரும் நாளாகவும், மாவீரர்களின் பெற்றோர்கள் அவலப்படக் கூடாது, மாறாக அவர்கள் தமிழீழ மக்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலும் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நோக்கின் அடிப்படையில் தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.
    தமிழீழ தேசத்தின் வீரப் புதல்வர்கள்
    தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தமிழீழ எல்லைப் பரப்புக்கள் எங்கும் ( கடலிலும், தரையிலும், வானிலுமாக,) எதிரியின் தேசத்திலும் எதிரிகளின் பாசறைகளை, கடற் கலங்களை, வானூர்திகளை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும், சத்திய வேள்வியில் நித்தமும் வேகி, தமிழர் தேசத்தை சூழ்ந்திருந்த அந்நியப்படைகளை விரட்டியடித்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிரினை ஈய்ந்து, உடலை உரமிட்டு, செங்குருதியால் வரலாறு படைத்து, மாவீரர்களாக தமிழீழ தேசம் எங்கும்,காவல்த் தெய்வங்களாக துயிலும் இல்லங்களிலும், யுத்தம் நடைபெற்ற கள முனைகளிலும், தமிழீழத்தின் கடல் அன்னையின் மடியினிலும் நித்திய துயில் கொள்பவர்கள் எங்கள் மாவீரர்கள்.
    இன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் எங்கும், வீர விதைகளாக, நினைவுக் கற்களாக, நினைவுச் சிலைகளாக, உருவச் சிலைகளாக, ஓவியமாய், வெள்ளை மலரேந்திய வேதங்களாய், ஈழமண்ணின் போராட்ட வரலாறுகளாய், ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதிப் பிழம்பாய் நிமிர்ந்து நிற்பவரே மாவீரகள்!
    தாகம் அடங்கிடத் தமிழீழம் கேட்டீர்!
    தடை அகன்றிட காற்றிலே கலந்தீர்!
    எல்லை வரைந்திட இரத்தமாய் சொரிந்தீர்!
    தேசம் பிறந்திட உயிரையே கொடுத்தீர்!
    தமிழீழம் மீட்டு, தமிழீழத் தனி அரசை நிறுவி-
    தமிழ்மானம் காக்கவே உயிர்கொடுத்தவர்கள் மாவீரர்களே!
    ஏன் இவர்கள் மாவீரர்கள்?
    *தமிழின விடிவுக்காய் மரணித்தவர்கள்.
    *தேசம் தூங்கிய போது விழித்திருந்தவர்கள்.
    *உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள்.
    *தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள்.
    *பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள்.
    *ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள்.
    *எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள்.
    *தமது மக்களுக்காய் களமுனைகளில் கண்களை கால்களை, கரங்கைளை இழந்து நின்ற வேளையிலும் தேச விடுதலைக்காய் வீரச் சாவடைந்த வீர மறவர்கள் தான் மாவீரர்கள்!
    தமிழீழ விடுதலைக்காய் களமாடி வித்தாகி வீழ்ந்த தமிழீழ தேசத்தின் மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் உறுதிப்பாடாயிற்று. இவ் நினைவெழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின், போர் வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரன் லெப்ரினன் சங்கர், செல்வச்சந்திரன் சத்தியநாதன், (சுரேஷ்) அவர்கள் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாளை தமிழீழ தேசம் தமிழீழ மாவீரர் நாளாக பிரகடனம் செய்துள்ளது.
    1982. ஆம் ஆண்டு நவம்பர் மாதம்20,ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், முற்றுகையை உடைத்து வெளியேறிய தாக்குதலில் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நவம்பர்-27 ஆம் நாள் மாலை 6.மணி, 5நிமிடமளவில் தலைவர்.வே.பிரபாகரன் அவர்களின் மடியில் சங்கர் அவர்கள் முதல் வித்தாக வீரச்சாவடைந்தார்.
    சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த நவம்பர்-27 ஆம் நாளே வருடந் தோறும் தமிழீழத்தின் எழுச்சி நாளாகவும், புனித நாளாகவும், தமிழினம் உணர்வு பூர்வமாக நெய் விளக்கேற்றி  வணங்கி, மாவீரர்களை நினைவுகூருகின்றது.
    மாவீரர் நாளை நெறிப்படுத்துதல்.
    மாவீரர் நாளானது, மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழம் எங்கும் நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் திகதி நிறைவடைகிறது. மாவீரர் எழுச்சி நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னரே தமிழீழ தேசம் எங்கும் புனிதப்படுத்தப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுவிடும்.
    தமிழீழ தேசமெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் மாவீரர் நினைவுத் தூபிகள், நினைவாலையங்கள், நிழற்படங்கள் அமைந்த இடங்கள், இல்லங்கள், ஒழுங்கைகள், வீதிகள், கல்விக் கூடங்கள், பொது இடங்கள், காரியாலயங்கள், அனைத்தையுமே மக்கள் அனைவரும் தனித்துவமாகவும், ஒருமித்தும் புனிதமாக்கி, மாவீரர் நினைவாக எமது தேசிய வர்ணக் கொடிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும்
    மாவீரர் எழுச்சி நாட்கள் 25 -27
    ஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு புதுப் பொலிவுடன் மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து காட்சி தரும்.
    தமிழீழ மக்கள் அனைவரும் அலங்கரிப்பு நிகழ்வுகளிலும், வீரவணக்க நிகழ்வுகளிலும் உணர்வு பூர்வமாக, கலந்துகொள்வார்கள்.
    வேறு வகையான களியாட்டங்கள், கொண்டாட்டங்கள், அனைத்தையும் மக்கள் தவிர்த்துக் கொள்வார்கள். தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்து விடும்.
    மதுச்சாலைகள் மூடப்பட்டு, மது பாவிப்பதை நிறுத்தி விடுவார்கள். வீடுகள் தோறும் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கும். மக்கள் குழுக்களாகவும், அமைப்புக்கள் ரீதியாக, மாவீரகளின் நினைவுகளை தங்கிநிற்கும் வகையிலான ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும், மற்றும் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.
    பாடசாலைகள்
    ஆசிரியர்கள் மாவீரர்களின் மான்பினையும், மாவீரர் நாளின் மகிமையையும், அதன் புனிதத் தன்மைகளையும் மாணவர்களுக்கு கற்பித்து, எழுச்சி நிகழ்வுகளுக்கு மாணவர்களை நவம்பர் 25, ஆம் திகதிக்கு முன்னரே தயார்படுத்தி விடுவார்கள்.
    பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நவம்பர் 25 ஆம் நாள் காலை 9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும், பாடசாலைகளில் மாவீரர்கள் தொடர்பான எழுச்சி வணக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.
    ஒட்டுமொத்த தமிழ் மக்களும், போராளிகளும், மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதில்  ஆசிரியர்கள், மாணவர்ளும், பொது மக்களும், பொது நிறுவனங்களும், கிரமா முன்னேற்றச் சங்கங்களும், சனசமூக நிலையங்களும் முழுமையாக இணைவதின் ஊடாக தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.
    தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27
    தமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அனைவரையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தமிழீழ மக்கள் தலைசாய்த்து வணக்கம் செலுத்தும் நாளாகவும், மாவீரர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும், தியாகங்களும் அருஞ் செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
    தமிழீழ தேசத்தின் புனிதர்களான அந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும், மாவீரர்களின் உறவுகளான குடும்பத்தினர்களும், மாவீரர்களை நினைத்து தலைமிரும் நாளாகவும், மாவீரர்களின் பெற்றோர்கள் அவலப்படக் கூடாது, மாறாக அவர்கள் தமிழீழ மக்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலும் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நோக்கின் அடிப்படையில் தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.
    தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப் போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து, நூறு, ஆயிரம் என்ற நிலை மாறி, பல்லாயிரமாக உயர்ந்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரக் கூடியதாக ஒரு பொதுவான நாளை தெரிவுசெய்த தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை பிரகடனம் செய்திருந்தார்.
    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரன் லெப்ரினன் சங்கர், செல்வச்சந்திரன் சத்தியநாதன், (சுரேஷ்) அவர்களின் நினைவு நாளான நவம்பர்-27 ஆம் நாளை தமிழீழ தேசம் தமிழீழ மாவீரர் நாளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
    விடுதலைப் போராட்டத்தில் உலகம் வியக்கும் வகையிலே புதிய வரலாறு படைத்து புதுமை சேர்த்து நிற்கும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மண் மீட்புப் போரிலே பல வெற்றிகளைக் குவித்துவரும் அதே நேரம் நாட்டை எல்லாத் துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களைத் தீட்டி வழிகாட்டி இயங்கி வருவதோடு தூய்மையான தேசிய விடுதலைப் போரை வீறோடு நடாத்தி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களைப் போற்றி நினைவில் நிறுத்தவும் அவர்களது பெற்றோரும் குடும்பத்தினரும் அல்லலுறும் நிலையை மாற்றவும் எனப் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.
    1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
    ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகள் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.
    ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் எதிரியின் அச்சுறுத்தல்கள் தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும், போராட்டத்தையும் நடாத்திக்கொண்டு தமிழ் மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
    வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு, நடுகற்கள் நாட்டப்பட்டு போற்றப்படுகிறார்கள். மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகில் எங்குமே தமிழீழ மாவீரர் நினைவுபோல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர்களின் பெற்றொரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ நடைபெறுவதாகவோ வரலாறில்லை.
    மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும் நடைமுறை ஒழுங்குகளும்
    1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
    தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வு ஆரம்பமாகும்.
    மாவீரர் எழுச்சி நாள் தொடக்க நிகழ்வுகள்
    01. சுடரேற்றல்
    02. தேசியக் கொடியேற்றல்
    03. அக வணக்கம்
    04. மலர் வணக்கம்
    05. நினைவுரைகள்
    06. உறுதியுரை
    என்பன வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும். தொடக்க நிகழ்வுகள் மாவீரர் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.
    தேசியக் கொடி ஏற்றல்
    மாவீரர் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாளன்று காலை 8.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகும். மாவீரர் துயிலும் இல்லங்களில் 25 ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஏற்றப்படும் தேசியக் கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.
    இயக்கப் பணிமனைகள் தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும். நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.
    பொது நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின், நண்பகல், 12.01 இன் பின்பாகவும்இ மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக் கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலையில் ஏற்றப்பட வேண்டும்.
    (தேசியக்கொடி ஏற்றுதல், இறக்குதல் தொடர்பான கூடுதலான விளக்கங்கள் தேசியக் கொடிப் பயன்பாட்டு விதிக் கோவை என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.)
    மாவீரர்கள் நினைவாக நினைவு ஒலி எழுப்பலும், சுடர் ஏற்றலும்
    27ஆந் திகதி சுடரேற்றும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். மாலை 6.05 மணிக்கு தமிழீழமெங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.
    துயிலும் இல்லத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் பீடத்தில் மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வுக் கொந்தளிப்போடு துயிலும் இல்ல வளாகத்தில் நின்று மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் நினைந்துருக சுடர் ஏற்றப்படும்.
    அமைப்பின் முதன்மையானவர்கள் பிரதான சுடரை ஏற்றிவைக்க, சமகாலத்தில் மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையவர்கள் சுடரை ஏற்றி மாவீரர்களை வணங்கி நிற்பார்கள். சமகாலத்தில் தமிழீழ பிரதேசத்திலும், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடங்களிலும், ஒவ்வொரு தமிழர்களின் இல்லங்களிலும் நினைவுச் சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தி உறுதி எடுத்துக் கொள்வார்கள்.
    சுவாலை விட்டெரியும் ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப் பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர் விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.
    சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவு கூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல மாவீரர் நினைவுச் சுடர்கள் 6.07 மணிக்கு சம நேரத்தில் தமிழீழ தேசம் எங்கும், அதேவேளை தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒளிர வேண்டும்.
    சிட்டி விளக்கேற்றக்கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீப்பந்தங்கள் ஏற்றியும் பொது இடங்களில் பொதுச் சுடர்களை ஏற்றியும் நினைவுகூர வேண்டும். இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப் பாதைக்கு உறுதியையும் உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.
    நவம்பர் 27 மாலை பிரதான நிகழ்வுகள்.
    *தமிழீழ தேசியத் தலைவரின் உரை
    *நினைவு ஒலி எழுப்புதல்-(6.05 மணி)
    *அக வணக்கம்,-(6.06 மணி)
    *ஈகைச் சுடரேற்றுதல்,-(6.07 மணி)
    தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் நினைவுரை (கொள்கைப் பிரகடன உரை)
    மாலை 6.05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வு ஆரம்பமாகும் வகையில், 6.05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வுக்கு முன்பாக தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் நினைவுரை நிகழ்வு இடம்பெறும்.
    நினைவு ஒலி எழுப்புதல்-(6.05 மணி)
    தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்ததும் 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் நினைவு ஒலி ஒரு மணித்துளி நேரம் தொடர்ச்சியாக எழுப்பப்படும். உயிர்காப்புப் பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.
    அக வணக்கம்-(6.06 மணி)
    மாவீரர்களுக்கான நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வு நிறைவடைந்தவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அக வணக்கம் செலுத்தப்படும். சம நேரத்தில் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்.
    ஈகைச் சுடரேற்றுதல்-(6.07 மணி)
    அகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படுதல் வேண்டும். (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடரேற்ற வேண்டிய கல்லறைகள் நினைவுக் கற்களுக்கு முன்னால் 5.45 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)
    மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள், நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினர், மற்றும் உருத்துடையோரும், நாட்டின் சூல்நிலை காரணமாக இடம் பெயர்ந்த மாவீரர் பெற்றோர்களுக்கென, துயிலும் இல்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரதான நினைவிடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்கள்.
    தமிழீழத்தின் எல்லைகளிலும், பாசறைகளிலும், கடமைகளில் இருக்கும் போராளிகள் அவர்கள் இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான இடங்களில் நினைவு ஒலி எழுப்பி, அகவணக்கம் செலுத்தி, நினைவுத் தீபம் ஏற்றி மாவீரர்களை வணங்குவார்கள்.
    இவை தவிர துயிலும் இல்லங்களுக்கு வர முடியாத மக்கள் தமது இல்லங்கள், மற்றும் பொது இடங்கள், அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள், போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரிய முறைப்படி ஈகைச் சுடரேற்றுவர். ஈகைச் சுடரேற்றும் போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும்.
    குறிப்பாக (மாவீரர் ஈகைச் சுடர் ஏற்றப்படும் நேரத்தில், அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாது. வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறு வகையில் ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.)
    போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும்
    எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.
    உங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும் எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம் அவர்களின் உணர்வுகள் இலட்சிய தாகம் கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகவும் புனிதத் தன்மை வாய்ந்தவையுமாகும். காலம் காலமாக நினைவுகூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.
    இம்மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழி நடாத்தும் உந்துசக்தியாக என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது. எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்து வரல் வேண்டும்.
    இந்த எமக்குரிய உயரிய நிகழ்வைத் தத்துவார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ஒருங்கிணைந்த பங்களிப்புக்களை வேண்டி நிற்கின்றோம்.
    புலிகளின் தாகம் தமிழீழத் தயாகம்
    நன்றி